திருமணத்தை உறுதிப்படுத்தும் சகுனம்
பிரச்ன சோதிட வித்தகர்
அம்சி விவேகானந்தர்
9443808596
சகுனம் என்னும் நிமித்த
சாஸ்திரம் கேலிக்குரியதன்று தெய்வீகக் கலையாம். ஜோதிடத்தின் ஆறு பேரங்கங்களில் ஒன்றே
நிமித்த சாஸ்திரமாகும். சாதகம் கோளம் நிமித்தம்
பிரச்னம் முகூர்த்தம் கணிதம்என்பதே சாதகத்தின் ஆறு அங்கங்கள். சோதிடத்தில்
சம்ஹிதா கிரந்தங்களோ நிமித்தங்களின் பன்முக பயன்களை எடுத்துக்
கூறுகின்றன. மணம் கைக் கூடுமோ
வர இருக்கும் செய்தி நன்மையானதா, தீமை
விளைய இருக்கிறதா என்பவற்றோடு ஏன் புவியில் தோன்றும்
பேர முடிவுகள், மன்னர்களின் மரணத்தைக் கூட நிமித்தங்களால் அறிந்துக்
கொள்ள முடியும்.
நிமித்த சாஸ்திரத்தை தெளிவாகக்
கற்ற சோதிட பண்டிதர்கள் சாதக்
கணிதங்கள் மற்றும் சோதிட விதிளைக்
கற்றுக் கொள்ளாமல கூட அற்புதமான பலன்களைக்
கூற முடியும் ஏன் சாமான்யனும் நிமித்தம்
கற்றுக் கொண்டால் அவன் சோதிட மாமணியாகத்
திகழ முடியும். திருமணத்திற்கு
பெண் பார்க்கும் போது மணமகன் அல்லது
திருமணம் வேண்டி காத்திருக்கும் இளம்
பெண் சோதிடரிடம் செல்லாமலேயே தமக்கு பார்த்திருக்கும் மணம்
கைகூடுமா இல்லையா என்பதை உணர
முடியும். இதற்கு சோதிட நூல்கள்
கூறும் கருத்துக்களை இங்கே காண்போம்.
யாத்திரை செல்லும் போது மது பானங்களை
காண்பது, பச்சை மாமிசம், பிணம்
எரியும் தீ, அட்சதை நெய்,
வெள்ளைப் பூக்கள், சந்தணம், இரட்டை பிராமணர்கள், விலை
மகள், தயிர், தேன், கருமபு,
யானை, மங்கல வாத்திய ஒலி,
கழுத்தில் கயிறு பூட்டப்பட்ட பசு
இவை எதிர் வர நாம்
செல்லும் காரியம் வெற்றியில் முடியும்
என் பிரச்ன சாஸ்திரம் கூறுகிறது.
சங்கு, பூ~ணம், மாலை
அணிகலன்கள், நிறைகுடம், பொன், வெள்ளி, வீணை,
நண்பர்கள் மேல் நல்ல செய்திகளை
காதுகளால் கேட்பது, மனதிற்கு இதமான வார்த்தைகளை கேட்பது,
பல வர்ணக் கொடி, இவை
எதிர் வரக் காண்பதும் மணதிற்கு
மகிழ்ச்சி தரும் காட்சிகள். சங்கு
நாதம் வாத்திய கோ~ம்,
வேத அத்யாயன சப்தம், புண்ணிய
வசனங்கள் தெய்வீக ஸ்தோத்திரங்கள், மங்கல
வர்த்தைகள், நறுமணம் தவழ்வது இவை
யாவும் சுபங்களை கூட்டுவிக்கும் நிமித்தங்களாகும். பொதுவாக நிமித்தங்களைக் குறித்து
சுருக்கமாக ஒரு பாடல் உள்ளது. அதன்
பொரள் ஒருச் செயலைக்குறித்து அல்லது
வருபவற்றைக் குறித்து நீ அவை சுபமான
தா? தீமையானதா? என உணர்ந்து கொள்ள
நீங்கள் பெறும் செய்திகள், அவற்றின்
நன்மை, தீமைகளுக்குத் தக்க வண்ணம் நீங்கள்
எண்ணிய காரியத்தின் முடிவு இருக்கும் என
உணர வேண்டும் எனக் கூறுகிறது நிமித்த
சாஸ்திரத்தை திருக்குறள் போல் இரு வரிகளுக்கள்
அடக்கி விட்ட இந்த செய்தி
அற்புதமானதாகும்.
அடுத்ததாக திருமணம் கூட்டுவிக்கம் நிமித்தங்களாக நூல்களில் கூறப்பட்ட நிமித்தங்களைக் காண்போம் திருமணம் குறித்த பேச்சு எழுந்த
போது அல்லது திருமணத்திற்காக பெண்
பார்க்கச் செல்லும் போது கீழ்கண்ட நிமித்தங்கள்
நிகழும் எனில் மணம் கைகூடும்
என உணரவேண்டும்.
1. எவரைக்
குறித்தேனும் அவரின் சிறப்புகளை ஒருவர்
எடுத்துக் கூறக் கேட்டோம் என்றால்
மணம் கூடும் என உணரலாம்
அதற்கு பதிலாக சலவை செய்த
புடவை அல்லது புதுப் புடவையைக்
காண நேரிட்டாலும் திருமணம் கைகூடும்
2. இரட்டை
புதுப்புடவைகளை காண நேர்வதும், சந்தனம்
மஞ்சள் இவை ஒன்றாக அரைத்த
வைக்கப்பட்டுளதை பார்த்தாலும்
3. இருக்
கன்னிப் பெண்களை ஒன்றாக காண்பது
அல்லது இரு இளைஞர்களை ஒன்றாக
காண்பது மணம் கூட்டுவிக்கும் நிமித்தங்கள்
4. அரைத்த
களபம் காண நேரிடினும், அல்லது
விசித்திரமானபட்டு புடைவைகளை காண்பது, பல்வண்ண பூக்கள், அல்லது
பல நிறங்களைக் காண்பது மணம் கூட்டுவிப்பதாகும்.
5. வால்
கண்ணாடியை காண நேரிடுவது, அதாவது
திருமண பேச்சின் இடையே எவரேனும் வால்
கண்ணாடியைக் கொண்டு வருவார் என்றால்
திருமணம் நடக்கம் எனக் கூறலாம்
அதற்கு பதிலாக தீடீரென ஒருவர்
கால் மூட்டுக்களை தொட காண்பதும் திருமணத்தை
கூட்டுவிக்கும் எனலாம்.
திருமணத்தைக்குறித்த
ஆலோசனை நேரம் அல்லது பெண்பார்க்கச்
செல்லும் போது இருவர் ஒருவரோடு
ஒருவர் கை கோர்த்தக் கொள்வதை
காண நேரிடின் நிச்சயமாக பார்க்கின்ற மணமானது கைகூடும் எனக்கூறலாம்
மேலும் மற்று ஒரு நூலின்
கூறப்பட்ட நிமித்த விதிகளை இங்கு
காண்போம்.
திருமணத்ததைக் குறித்த ஆலோசனை செய்யும்
வேளை கமண்டலத்தை தவிர்த்து மற்று பாத்திரங்களை எவரேனும்
விற்பதற்காக கொண்டு வருகின்றார் என்றாலும்
வால்கண்ணாடி, தும்பை பூ, வெள்ளில்
பொருட்கள், நீராடி தூய்மையுடன் பூனூல்
அணித்த ஆணை காண நேரிடினும்,
கையால் கண்களை தொடுவதை பார்த்தாலும்
உடனடியாக மணம் கைகூடுமாம்,
அதுபோலவே தீய நிமித்தங்களாக கூறப்பட்ட
சகுனங்கள் தோன்றினால் நாம் தற்போது நிச்சயம்
செய்ய இருக்கும் பெண்ணை, அல்லது ஆணை
மணம் முடிப்பது தீமையை தரும் எனவும்
உணர வேண்டும் என்னும் தகவலுடன்
No comments:
Post a Comment