வார ராசிப்பலன்
டிசம்பர் 4 முதல் 10 வரை 2016
கார்த்திகை 19 முதல் 25 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Phone - 044 24881038 / 24839532.
cell: 0091 7200163001. 9383763001.
email- vaarajothidam@gmail.com,
Visit as @ www.muruguastrology.com
கேது
|
திருக்கணித கிரக நிலை
| ||
செவ்
சுக்கி
|
ராகு
| ||
புதன்
|
சனி
சூரிய
|
சந்தி
|
குரு
|
கிரக மாற்றம் இல்லை
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம் 03.12.2016 மதியம் 01.45 மணி முதல் 05.12.2016 இரவு 11.01 மணிவரை.
கும்பம் 05.12.2016 இரவு 11.01 மணி முதல் 08.12.2016 காலை 05.26 மணிவரை.
மீனம் 08.12.2016 காலை 05.26 மணி முதல் 10.12.2016 காலை 08.28மணிவரை.
மேஷம் 10.12.2016 காலை 08.28 மணி முதல் 12.12.2016 காலை 08.50மணிவரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
04.12.2016 கார்த்திகை 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமிதிதிஉத்திராட நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை
05.12.2016 கார்த்திகை 20ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டிதிதி திருவோணநட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள்விருச்சிக இலக்கினம். வளர்பிறை
09.12.2016 கார்த்திகை 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதிஉத்திரட்டாதி நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல் 07.00மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும்குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்மராசிக்கு 9ல் புதன், 10ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடல்ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். சிறு சிறு பாதிப்புகள்தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணவரவுகள்தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக்குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குபல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். 8ல் சூரியன் சனிசஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள்உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரியமுதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் விரயங்களை சந்திப்பீர்கள்.தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடையசற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத்தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள்தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்குஎதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்றுகவனமுடன் செயல்பட்டால் எதிர் பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும்.சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.
வெற்றிதரும் நாட்கள் - 4,5,6,7,10.
ரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம்பாதங்கள்
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடுபேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள்ஜென்ம ராசிக்கு 5ல் குரு, 9ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும்முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும்.தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்கள் படிப்படியாககுறையும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமானநிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ்உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆடை ஆபரணம்போன்றவற்றை வாங்குவீர்கள். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும்.செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இருமடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையானசெயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். 7ல்சனி சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து உற்றார்உறவிர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கியவிஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்தமதிப்பெண்ணை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அரசு வழியிலும்ஆதாயங்கள் கிட்டும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் - 6,7,8,9.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம்பாதங்கள்
எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்ககூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள்ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில்மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். இதுவரை உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே மறையும். எடுக்கும் முயற்சிகளில்தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.உடல் ஆரோக்கியமும் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதிலும்சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள்மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல் வாங்கலில் பெரியதொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால்எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம்செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும்.கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும்.உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு உயரதிகாரிகளின்பாராட்டுதல்களை பெற முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் சிறுசிறுதடைகளுக்குப் பின் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலனைஅடைவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளிகல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். குரு 4ல் சஞ்சரிப்பதால்தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 8,9,10.
சந்திராஷ்டமம் 03.12.2016 மதியம் 01.45 மணி முதல் 05.12.2016 இரவு11.01 மணி வரை.
கடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசிநேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 5ல் சூரியன், 7ல் சுக்கிரன்சஞ்சரிப்பதால் எதிலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெறுவீர்கள்.பண வரவுகளில் நெருக்கடிகளும், உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறுபிரச்சினைகளும் உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமையும்மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் வீண்விரயங்களை சந்திக்க நேரிடும். எதிர்பாராத வகையில் கிடைக்கப் பெறும்உதவிகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில்எதிர் நீச்சல் போட்டே வெற்றியினைப் பெற முடியும். தொழில் வியாபாரம்செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரியமுதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்றுகவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில்நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்குசாதகமாகச் செயல்படுவார்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பிவர்களே துரோகம் செய்வார்கள்என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்.மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில்சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சர்ப கிரகங்கள் சாதகமற்றுசஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 4,5,10.
சந்திராஷ்டமம் 05.12.2016 இரவு 11.01 மணி முதல் 08.12.2016காலை 05.26 மணி வரை.
சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்டசிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 5ல்புதன், 6ல் செவ்வாய், சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையேஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறுபாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன்இருப்பது நல்லது. எடுக்கும் சுபகாரியங்களில் வெற்றி கிட்டும்.பணவரவுகள் தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகசெயல்படுவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப்பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். பணம்கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால்அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால்லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின்உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். ஆன்மீக தெய்வீககாரியங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். சற்றுஅலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியிலும்விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். நல்ல நட்புகள்தேடி வரும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 4,5,6,7.
சந்திராஷ்டமம் - 08.12.2016 காலை 05.26 மணி முதல் 10.12.2016 காலை08.28மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின்சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசிநேயர்களே, ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், சனி சஞ்சாரம் செய்வதால்எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதியஉயர்வுகள் தாமதப்ட்டாலும் பணியில் கௌரவமான நிலை இருக்கும்.திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால்மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெறமுடியும். தொழில் வியாபாரம் செய்வர்கள் மறைமுக எதிர்ப்புகள்,போட்டிகள் போன்றவற்றை சந்திக்க நேர்ந்தாலும் கிடைக்க வேண்டியலாபம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்துநடந்து கொண்டால் மன நிம்மதி இருக்கும். பணவரவுகளல் ஏற்றஇறக்கமான நிலையிருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து விடமுடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள்தோன்றினாலும் சிறுசிறு மருத்துவ செலவுகளுக்குப்பின் எதிலும்சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கானமுயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது, பணம் கொடுக்கல்வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. விரோதிகளும்நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். மாணவர்களுக்குபெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் தட்சிணாமூர்த்தியை வழிபாடுசெய்யவும்.
வெற்றிதரும் நாட்கள் - 6,7,8,9-.
சந்திராஷ்டமம் 10.12.2016 காலை 08.28 மணி முதல் 12.12.2016 காலை08.50மணி வரை.
துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசிநேயர்களே, ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், 4ல் செவ்வாய் சஞ்சரிப்பது சற்றுசாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும்என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம்உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரைதேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். கொடுக்கல்வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும்.தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையே காணப்படும்என்றாலும் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள்மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும்.முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது,உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்குதேவையற்ற பொழது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும்.பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ராகுகேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.
வெற்றிதரும் நாட்கள் - 8,9,10.
விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே ஜென்மராசிக்கு 3ல் செவ்வாய், 11ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள்அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால்குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில்திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும்.கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும்ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கானமுயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும்.உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்றமருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களைஅனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அவர்களால் சாதகப்பலனைப்பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும்பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக அமைவார்கள். புதியஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். தேவையற்றபயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப்பெற முடியும். மாணவர்களுக்கு அரசு வழியில் கல்விக்காக உதவிகள்கிட்டும். ஏழரைசனி தொடருவதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வதுநல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 4,5,10.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம்கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய், 12ல்சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில்கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும்நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளைகொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை திரும்ப கேட்டால் சிலவீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கானமுயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்துகொள்வது நல்லது. புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள்ஏற்படும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். எடுக்கும்காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறவீர்கள்.தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திகொள்வது கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றின்மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள்தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும்.மாணவர்கள் கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள்அதிகரிக்கும். செவ்வாய் 2ல் சஞ்சரிப்பதால் முருகப் பெருமானைவழிபடுவது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் - 6,7.
மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ம்பாதங்கள்
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே,ஜென்ம ராசிக்கு 9ல் குரு, 11ல் சூரியன், சனி சஞ்சரிப்பது அற்புதமானஅமைப்பு என்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள்படிப்படியாக விலகும். நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வெளியூர்,வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் உண்டாகும்.உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதியஉயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கேற்றபாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது,உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில்நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். சுபகாரியங்களுக்கானமுயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலைசிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும்பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலிலும் பெரியதொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையாசொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். மாணவர்கள் கல்வியில்திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப்பெறுவார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 4,5,8,9.
கும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசிநேயர்களே ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன், 11ல் புதன் சஞ்சாரம் செய்வதால்பணவரகள் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். கணவன் மனைவி விட்டுகொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். உடல்ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில்சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கானமுயற்சிகளை மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம்.உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதியஉயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப்பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்தஇடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்தமுறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பணம் கொடுக்கல்வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் கொடுத்தவாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். உற்றார் உளவினர்களைஅனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். ஆடம்பர செலவுகளைகுறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மாணவர்கள்கல்வியில் சற்று அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். ராகு,கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் - 6,7,10.
மீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாகநினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 7ல்குரு, 11ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில்சுபிட்சமான நிலை இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்துபாக்கெட்டை நிரப்பும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம்அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவதால் மகிழ்ச்சிநிலவும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம்செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில்நல்ல அனுகூலங்களை பெறுவார்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையானசெயல்பாடுகளால் புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர்,வெளிநாட்டு தொடர்புடைய வைகளாலும் லாபம் கிட்டும். பணம்கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கணவன் மனைவியிடையேஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்படசெயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசுவழியில் சில எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள்கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். தினமும்விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் - 4,5,8,9.
No comments:
Post a Comment