வார ராசிப்பலன் டிசம்பர் 11 முதல் 17 வரை 2016
வார ராசிப்பலன் டிசம்பர் 11 முதல் 17 வரை 2016
கார்த்திகை 26 முதல் மார்கழி 2 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
சந்தி
| |||
கேது
|
திருக்கணித கிரக நிலை
| ||
செவ்
சுக்கி
|
ராகு
| ||
புதன்
|
சனி
சூரிய
|
குரு
|
கிரக மாற்றம்
11- 12- 2016 கும்ப செவ்வாய்
15-12- 2016 தனுசு சூரியன்
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மேஷம் - 10.12.2016 காலை 08.28 மணி முதல் 12.12.2016 காலை 08.50 மணி வரை.
ரிஷபம் - 12.12.2016 காலை 08.50 மணி முதல் 14.12.2016 காலை 08.14 மணி வரை.
மிதுனம் - 14.12.2016 காலை 08.14 மணி முதல் 16.12.2016 காலை 08.51 மணி வரை.
கடகம் - 16.12.2016 காலை 08.51 மணி முதல் 18.12.2016 மதியம் 12.41 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
16.12.2016 மார்கழி 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரிதியை திதி புனர்பூசநட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசுஇலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல்கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் புதன், 10ல்சுக்கிரன், 11ம் தேதி முதல் 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்குசாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடிஇருக்கும். முடிந்தவரை ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்ப்பதுநல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்ளவும்.எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமேஅதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரியதொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும்.உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் என்றாலும்8ல் சூரியன் இருப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள்உண்டாகக் கூடும் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும்.தொழிலாளர்களிடம் தட்டி கொடுத்து வேலை வாங்கி கொள்ளவதுஉத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும்என்பதால் கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது நல்லது.வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது மூலம்நற்பலனை அடையலாம்.
வெற்றிதரும் நாட்கள் - 11,14,15.
ரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம்பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்புகொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5ல் குரு சஞ்சரிப்பதும், 11ம் தேதி முதல் 10ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமானஅமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடபணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும்முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமாகசுபகாரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம்அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள்நடைபெறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். உற்றார்உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீடு, வாகனங்கள்வாங்கும் வாய்ப்பு அமையும். 7ல் சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம்செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும்பெரிய கெடுதிகள் ஏற்படாது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவாய்ப்புகளால் லாபம் அமையும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும்.உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில்வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால்கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும்.மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடுசெய்வது உல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 12,13,16,17.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம்பாதங்கள்
நிதானமான அறிவாற்றலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தைமாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்மராசிக்கு 6ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும்சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குபோட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும்.கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எடுக்கும்முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின்பாராட்டுதல்களை பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின்ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறுகருத்து வேறுபாடுகள் தோன்ற கூடிய காலம் என்பதால் பேச்சில்நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது நல்லது.உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள்.அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் கவனமுடன்இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்டபாதிப்புகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளைபிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு ஏற்படகூடிய உடல்நலக் குறைவுகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டியசூழ்நிலை ஏற்படும். முருகபெருமானை வழிபடுவதன் மூலம் நற்பலன்கிட்டும்.
வெற்றிதரும் நாட்கள் - 11,14,15.
கடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்டகடக ராசி நேயர்களே, குடும்ப ஸ்தானமான 2ல் ராகு 3ல் குரு, 5ல் சூரியன்சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் வீண்பிரச்சனைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். கணவன்மனைவிடையே ஒற்றுமை குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும்.வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்கள்ஏற்படுத்தும் பிரச்சனைகளால் நடக்க இருந்த சுபகாரிய முயற்சிகளில்தடைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது,உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது, தேவையின்றி பிறர்விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில்வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால்கை நழவி போகும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வதுநல்லது. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளைகடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்துகொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்றுவேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்படமுடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கரை எடுத்து கொள்வதுநல்லது. துர்கை அம்மனை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.
வெற்றிதரும் நாட்கள் - 11,12,13,1617.
சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சாநெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2ல் குரு, 5ல்புதன், 6ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் இந்த வாரம் உங்களதுபொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். செல்வம்,செல்வாக்கு உயரும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வீடு மனைவாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்றுகவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும்சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்குநல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடியசம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள்மனஅமைதியை அளிப்பதாக அமையும். கொடுக்கல் வாங்கலில் பெரியதொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்தகடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும்முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டுதொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். பயணங்களாலும்அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும்உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குசெல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்விதிறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 12,13,14,15.
கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல்செயல்படும் கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் சனி, சூரியன்சஞ்சரிப்பதும், 11ம் தேதி முதல் 6ல் செவ்வாய் சஞ்சாரம்செய்யவிருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள்அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில், வியாபார ரீதியாகசிறப்பான மேன்மைகளை அடைய முடியும். குரு ஜென்ம ராசியில்சஞ்சரிப்பதால் பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது.உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை உண்டாகும்.தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷன்களைகுறைத்து கொள்ள முடியும். பலரை வழிநடத்திச் செல்லக் கூடியகௌரவமான பதவிகள் தேடி வரும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமானநிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்டபாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமணசுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளை சற்று தள்ளி வைப்பதுஉத்தமம். புத்திர வழியிலும் சில மனசஞ்சலங்களை சந்திக்கவேண்டியிருக்கும். அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள்ஏற்படும். மாணவர்கள் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்தமதிப்பெண்களை பெற்று விட முடியும். குருவுக்கு பரிகாரம் செய்வதுதட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் - 14,15,16,17.
சந்திராஷ்டமம் 10.12.2016 காலை 08.28 மணி முதல் 12.12.2016 காலை 08.50 மணி வரை.
துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசிநேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன் சனி சஞ்சரிப்பதுசாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன் மனைவியிடையே தேவையற்றவாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். தேவையற்றஅலைச்சல்கள் ஏற்படுவதால் சுகவாழ்வில் பாதிப்பும், வீண் விரயங்கள்உண்டாகும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்காது. அன்றாடபணிகளை செய்து முடிப்பதில் சோர்வு உண்டாகும். நேரத்திற்கு உணவுஉண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். பணவரவுகளில் சற்றுநெருக்கடியான நிலையே இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யகடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். உற்றார்உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணம்கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். மறைமுகஎதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்த வித பிரச்சனைகளையும்சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில்மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. பெரியமுதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்தையும் செய்யாதிருப்பதுநல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில்கவனம் செலுத்துவது உத்தமம். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 11,16,17.
சந்திராஷ்டமம் - 12.12.2016 காலை 08.50 மணி முதல் 14.12.2016 காலை 08.14 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும்குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல்புதன், 3ல் சுக்கிரன், 11ல் குரு சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால்கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில்சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்துநடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும்பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். அசையும்அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்றபயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளமுடியும். ஏழரை சனியில் ஜென்மசனி தொடருவதால் உடல்ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ வெலவுகளைஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்துலாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரியமுதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும்உயர்வுகளை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டுநல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடுசெய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 11,12,13.
சந்திராஷ்டமம் - 14.12.2016 காலை 08.14 மணி முதல் 16.12.2016 காலை 08.51 மணி வரை.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 12ல் சூரியன், சனி சஞ்சரிப்பது சாதகமற்றஅமைப்பு என்றாலும் 11ம் தேதி முதல் 3ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யஇருப்பதால் உங்கள் பலமும் வளமும் கூடும். எடுக்கும் முயற்சிகள்அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த காலங்களில் இருந்து வந்தபிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில்அடிக்கடி பாதிப்புகளும், சோர்வு மந்த நிலை போன்றவையும் உண்டாகும்.கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றும்என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாகஇருந்தாலும் தேவையற்ற ஆடம்பல செலவுகளை தவிர்த்தால்கடன்களைக் குறைக்க முடியும். திருமணம் போன்றசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சியில் கவனம்தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளைஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குபோட்டிகள் நிலவுனாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும்.ஆஞ்சநேயரை வழிபடுவது, முருகப்பெருமானை வழிபாடு செய்வதுநல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 12,13,14,15.
சந்திராஷ்டமம் - 16.12.2016 காலை 08.51 மணி முதல் 18.12.2016 மதியம் 12.41 மணி வரை.
மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம்பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில்எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும்கொண்ட மகர ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் குரு, 11ல்சூரியன் சனி சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும்.குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள்சற்றே குறையும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்துவிஷயங்களில் சற்று சாதகமானப்பலனை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். சர்ப கிரகங்கள் சாதகமின்றிசஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள்உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உடல்ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண வயதைஅடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபம் கிட்டும்.வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின்நட்பு கிட்டும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள்.ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெறமுடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்குபெருமை சேர்ப்பார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவதுநல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 14,15,16,17.
கும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாயஅநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசிநேயர்களே உங்களுக்கு மாதகோளான சூரியன் சாதகமாக சஞ்சாரம்செய்வதும், 11ல் புதன் சஞ்சரிப்பதும் ஓரளவுக்கு அனுகூலமான அமைப்புஎன்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவதுவெற்றியினைப் பெற முடியும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில்திறம்பட செயல்பட முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும்செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது.கணவன் மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார்உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின்பே வெற்றிகிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளிகளை அனுசரித்துசெல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால்அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள்எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கேற்றபாராட்டுதல்கள் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில்கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். துர்க்கைஅம்மனை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 11,16,17.
மீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் உடையவர்களாவும்,திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்களுக்குராசிக்கு 7ல் குரு, 10ல் புதன் 11ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பணம் பலவழிகளில் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளை பெறுவீர்கள். நினைத்த காரியங்களையும்நிறைவேற்றி விட முடியும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாகஅமையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சிஅளிக்கும். பொன், பொருள் சேரும். கணவன் மனைவியிடையேசிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாகசெயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீகசொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையாசொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம்செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவாகசெயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். வெளியூர் வெளிநாடுகளுக்குசெல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணயில்திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள்நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின்பாராட்டுதல்களைப் பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனைவழிபடவும்.
வெற்றிதரும் நாட்கள் - 12,13.
No comments:
Post a Comment