வார ராசிப்பலன் நவம்பர் 20 முதல் 26 வரை 2016
இந்த வார ஜோதிடம் (புதிய வார இதழ்)
சந்தா விவரங்களுக்கு அணுகவும்
contact us : 044- 43993014, 8939882466
Mail id: nakkheeranmagazineweb@gmai l.com, nakkheeransantha@gmail.com
ஆசிரியர்: Dr Murugu Balamurugan PhD
சந்தா விவரங்களுக்கு அணுகவும்
contact us : 044- 43993014, 8939882466
Mail id: nakkheeranmagazineweb@gmai
ஆசிரியர்: Dr Murugu Balamurugan PhD
வார ராசிப்பலன் நவம்பர் 20 முதல் 26 வரை 2016
கார்த்திகை 5 முதல் 11 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
கேது
|
திருக்கணித
கிரக நிலை
| ||
செவ்
|
ராகு
| ||
சுக்கி
|
சனி புதன்
சூரிய
|
குரு
|
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள் மலேசியா நேரப்படி
கடகம் 18.11.2016 இரவு 10.33 மணி முதல் 21.11.2016 காலை 04.02 மணி வரை.
சிம்மம் 21.11.2016 காலை 04.02 மணி முதல் 23.11.2016 மதியம் 01.31மணி வரை.
கன்னி 23.11.2016 மதியம் 01.31 மணிமுதல் 26.11.2016 அதிகாலை 01.33 மணி வரை.
துலாம் 26.11.2016 அதிகாலை 01.33 மணி முதல் 28.11.2016 மதியம் 02.19 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள்நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவி செய்யும் பண்புகொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் குரு, 8ல்சனி, சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அதிகஅக்கரை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்வர்களாலும்மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்களும், உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளும்உண்டாகும் என்பதால் அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்துகொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம்குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால்வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும்என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது.கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் தட்டி கொடுத்து வேலைவாங்குவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளுஅதிகமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள்.மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக பாடுபடவேண்டியிருக்கும். சனிக்கு பரிகாரம் செய்வது, சிவபெருமானை வழிபாடுசெய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 23,24,25,26,
ரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம்பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கி கொள்ளக்கூடிய அளவிற்கு சகிப்புதன்மைஅதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல்குரு, 7ல் புதன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன், பொருள்சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். அசையும் அசையாசொத்துக்களை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில்இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். பணம் கொடுக்கல்வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றிகிடைப்பதால் லாபம் பெருகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன்செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில்நிம்மதியான நிலையிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும்சிறப்பாகவே இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணம்மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். மாணவர்களுக்கு கல்வியில்ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது துர்கை அம்மனை வழிபடுவதுநல்லது.
வெற்றிதரும் நாட்கள் 20,26
மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம்பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசை துறைகளில் சிறந்துவிளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம்ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், சனி, 3ல் ராகு சஞ்சாரம் செய்வதால்எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள்எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாககுறையும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும்.குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில்சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன்செயல்படுவீர்கள். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள்அனுகூலமாக இருப்பார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடுஉண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத்தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள்எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும்.உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் இருக்கும். பயணங்களால்அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்துசெயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் தேவையற்றபொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவதுஉத்தமம். குருபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 21,22,23
கடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
கோபமாகவும் வேகமாகவும் பேசினாலும் அதில் உண்மையிருக்கும்என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்டகடக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3ல் குரு 7ல் செவ்வாய் சஞ்சாரம்செய்வதால் கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள்ஏற்படும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால் தேவையற்றமருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களைஅனுசரித்துச் செல்வது மூலம் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதாரநிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். வீண் செலவுகளை குறைப்பதுஉத்தமம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால்வெற்றியினைப் பெற முடியும். பண விஷயத்தில் பிறரை நம்பிவாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைதவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளைஎதிர் கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு சற்றுக் கூடுதலாக இருக்கும்.தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, முருகப் பெருமானை வழிபாடுசெய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 20,23,24,25.
சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல்கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடுபட்டாவதுகாப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே,இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 5ல் சுக்கிரன், 6ல் செவ்வாய்சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்குநல்ல வரன்கள் தேடி வரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லாவகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள்தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த வீடுமனை வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார்உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள் என்றாலும் அளவோடு வைத்துகொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள்தடையின்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பானமுன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டுதொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். பயணங்களாலும்அனுகூலம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுபெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். துர்கை அம்மனைவழிபாடு செய்வது, விநாயகரை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 21,22,23,26.
கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அனைவரிடத்திலும் அன்பும் பண்பும், மரியாதையும் கொண்டவராகவும்,தெய்வ பக்தி உடையவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, இந்தவாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், சனி, 6ல் கேது சஞ்சாரம் செய்வதால்நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள், ஆடைஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாகஅமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியமுயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உற்றார்உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கலில்பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது.கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. தெய்வதரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்குதகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம்செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் சாதகமான செயல்பாட்டால்அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சற்றுஈடுபாட்டுடன் செல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 20,23,24,25
துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
தம்முடைய எந்த பொருட்களையும் கேட்பவருக்கு தானமளிக்க கூடியபரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, இந்தவாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், சனி 4ல் செவ்வாய் சஞ்சாரம்செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் நன்மை தீமை கலந்தபலன்களையே பெற முடியும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்களால் கணவன்மனைவியிடையே தேவைய்றற கருத்துவேறுபாடுகள் உண்டாகும்என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களைஅனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்றஇறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்கமுடியும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும்.தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்துநடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற சற்றுபாடுபட வேண்டியிருக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.கடன் சற்றே குறையும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன்ஈடுபடுவது உத்தமம். முருகப் பெருமானை வழிபாடு செய்வது, சிவவழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 20,21,22,23,26
விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதைபிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்மராசிக்கு 3ல் செவ்வாய், 11ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில்மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையேஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாகசெயல்படுவார்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால்அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம்செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள்சில தடைகளுக்கு பின் கிடைத்தாலும் லாபங்கள் தடைபடாது.உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்துபணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீககாரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல்ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனேசரியாகிவிடும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச்செயல்படுவது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்றுஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவதோடு பள்ளி கல்லூரிக்கும்பெருமை சேர்ப்பார்கள். சனிபகவானை வழிபடுவது, சிவ வழிபாடுசெய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 21,22,23,24,25
தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளைபூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல்கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஏழரை சனி தொடருவதும், 2ல் செவ்வாய் 12ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்புஎன்பதால் உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில்கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்துநடந்த கொண்டால் சாதகமான பலனைப் பெற முடியும். குடும்பத்தில்ஓரளவுக்கு சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை ஓரளவுக்குசிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும்.கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும்தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தேஎதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கடன்கள் சற்றே குறையும்.பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள்உயரதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம்.தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 23,24,25,26.
சந்திராஷ்டமம் 18.11.2016 இரவு 10.33 மணி முதல் 21.11.2016 காலை 04.02 மணி வரை
மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம்பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ளகபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசிநேயர்களே, ஜென்ம ராசிக்கு 9ல் குரு, 11ல் சூரியன், புதன், சனி சஞ்சாரம்செய்வதால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். கணவன்மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள்.திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உறவினர்கள்சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும்.பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்வாங்கலும் சரளமாக நடைபெறுவதால் லாபம் சிறப்பாக அமையும்.உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல்ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாகசெய்ய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியவிரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலைதேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். அடிக்கடி பயணங்கள்மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். தெழில் வியாபாரம்செய்பவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள்கல்வியில் சிறந்து விளங்க முடியும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வதுநல்லது.
வெற்றிதரும் நாட்கள் 20,26.
சந்திராஷ்டமம் 21.11.2016 காலை 04.02 மணி முதல் 23.11.2016 மதியம் 01.31மணி வரை.
கும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்ததெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களேஉங்கள் ஜென்ம ராசிக்கு 8ல் குரு, 12ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால்குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்றஇறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள்கிடைக்கப்பெறும். கணவன் மனைவியிடையே தேவையற்றகருத்துவேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக்கடைப்பிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும்.எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறுபாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. பணம்கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்தவாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்தஉயர்வுகள் சற்று தாமதப்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைபயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம்செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ராகுகேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 20,21,22,23.
சந்திராஷ்டமம் 23.11.2016 மதியம் 01.31 மணிமுதல் 26.11.2016 அதிகாலை 01.33 மணி வரை.
மீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும்அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே இந்த வாரம்ஜென்ம ராசிக்கு 7ல் குரு, 10ல் சுக்கிரன் 11ல் செவ்வாய் சஞ்சாரம்செய்வதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்தபோட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில்மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள்குறைந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குபணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும்.சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்றுகுடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம்மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள்.கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். எடுக்கும்காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும்உண்டாகும். கணவன் மனைவியுடையே ஒற்றுமை பலப்படும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். தினமும் விநாயகரைவழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 21,22,23,24,25.
சந்திராஷ்டமம் 26.11.2016 அதிகாலை 01.33 மணி முதல் 28.11.2016 மதியம் 02.19 மணி வரை.
No comments:
Post a Comment