உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 27.11.2016

உங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 27.11.2016
இந்த வார ஜோதிடம்
இதழின் இலவச கேள்வி பதில் 27.11.2016
எனக்கு பொருளாதார முன்னேற்றம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்.
அருணாச்சலம், திருவண்ணாமலை.
பொதுவாக ஒருவரது பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமைய தனஸ்தானமான 2ம் இடமும், தனக்காரகன் குரு பகவானும் பலமாக இருக்கவேண்டும். குரு வக்ரம் பெற்றால் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைஉண்டாகிறது.
உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ளஉங்களுக்கு 2ம் அதிபதி சனி 12ல் மறைந்து, தனக்காரகன் குரு பாதகஸ்தானத்தில் வக்ரம் பெற்று அமைந்து அஷ்டம ஸ்தானாதிபதியானசூரியனின் திசையில் குரு புக்தி நடைபெற்றதால் அனுகூலமான அமைப்புஇல்லை என்பதால் பண வரவுகளில் நெருக்கடியான நிலையே இருந்தது.பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் நற்பலனை அடையமுடியவில்லை. பாதகஸ்தானத்தில் உள்ள குரு புக்தி முடிந்துலக்கினாதிபதி சனியின் புக்தி 16.11.2016 முதல் நடைபெறுவதால்முன்னேற்றபலன் உண்டாகும். அடுத்து 11.1.2020 முதல் நடைபெறவுள்ளசந்திர திசை காலங்களில் பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள்உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
எனது அக்காள் மகள் கல்வி அறிவு எப்படி இருக்கும்.
கற்பக நாயகி, கொன்றைகாடு
பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் 4, 5ம் பாவங்கள் கல்வியை பற்றிஉணர்துவதாக அமைகின்றன. ஜாதகியின் ஜாதகத்தில் 4ம் அதிபதிசுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும் புதனுடன் பரிவர்த்தனைப்பெற்றிருப்பதால் நீச பங்கம் உண்டாகி உள்ளது. இதனால் ஜாதகியின்கல்வியில் சில தடைக்கு பின் சிறப்பாக இருக்கும். அவ்வப்போது சற்றுமந்த நிலை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிடுவாள். கல்விக்காக இருக்கும் இடத்தை விட்டு வெளி இடங்களுக்குசெல்லும் வாய்ப்பும் அமையும். ஜாதகிக்கு 13 வயது முதல் 8ல் உள்ளராகுவின் திசை தொடங்க உள்ளதால் உடல் ஆரோக்கிய விஷயத்திலும்கல்வியிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. முருகப் பெருமானைவழிபாடு செய்வது உத்தமம்.
என் மகன் இந்த வருடம் +2 தேர்வு எழுத உள்ளான். அடுத்து கல்லூரிபடிப்பு எந்த துறையில் அமையும்.
செல்வராஜ், புது கோட்டை
பொதுவாக ஒருவரது கல்வி, உயர்கல்வியைப் பற்றி அறிய 4,5ம் பாவம்உறுதுணையாக இருக்கின்றது.
அவிட்ட நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ளஉங்களுக்கு 4ம் அதிபதி சனி, 5ம் அதிபதி குரு கேந்திர ஸ்தானமான 7ல்அமைந்து இருப்பதும், கல்வி காரகன் புதன் ஆட்சி உச்சம் பெற்றுஅமைந்திருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் ஜாதகருக்குசிறப்பான கல்வி யோகம் உண்டு. 4ம் அதிபதி சனி திக்பலம் பெற்றுஅமைந்திருப்பதால் தொழில் நுட்ப கல்வி யோகம், டெக்னிக்கல்,விவசாயம் சார்ந்த கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும். 10ல் சூரியன்,செவ்வாய் பலம் பெற்று இருப்பதால் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். அதற்கான கல்வியையும் தேர்ந்தெடுத்துபடிக்கலாம். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.
என் தங்கை மகள் அவள் காதலிக்கும் பையனையே திருமணம் செய்துகொள்வேன் என்கிறாள். இதை தடுக்க வழி உள்ளதா,
விச்வேச்வரன் சிதம்பரம்.
பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் மன ஈர்ப்பு, காதல் பற்றி குறிப்பிடுவது5ம் பாவமாகும். 7ம் இடம் களத்திர ஸ்தானம் ஆகும். 5,7க்கு அதிபதிகளின்தொடர்பு இருந்தால் காதல் வரும்.
மக நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள ஜாதகிக்குமனோகாரகன் சந்திரன் கேது சாரம் பெற்று அமைந்து, 5ம் அதிபதி குரு 7ல்அமைந்து வக்ரம் பெற்று, 7ம் அதிபதி சனியும் கேது சாரம் பெற்றுவக்ரகதியில் இருப்பதால் ஜாதகிக்கு காதல் திருமணம்நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதில் பிரச்சனைகளை சந்திக்கும்சூழ்நிலை உண்டாகும். பெற்றோர் சொற்படி நடக்க மாட்டாள். திருமணம்நடந்தாலும் பிரிவு பிரச்சனை ஏற்பட்டு மீண்டும் ஒரு வாழ்க்கைஅமையும். ஜாதகத்தில் நிறைய தோஷங்கள் இருப்பதால் தொடர்ந்து குலதெய்வ வழிபாடுகள் மேற்கொள்வது உத்தமம்.
அடுத்து வரும் சுக்கிர திசை எனக்கு எப்படி இருக்கும்.
சுதர்சன் திருச்சி.
ஒருவரது ஜாதகத்தில் ஒரு கிரகம் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்றுபலமாக இருந்து ஜாதகரின் வாழ் நாளின் அந்த கிரகத்தின் திசையோபுக்தியோ நடைபெறுமானால் அவர் வாழ்வில் எல்லையில்லாஉயர்வுகளைப் பெறுவார்.
பூச நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு7, 12க்கு அதிபதி சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைந்து 12ல் இருப்பதால்சுக்கிர திசை காலங்களில் அற்புதமான நற்பலன்களைப் பெற முடியும்.கேது நின்ற வீட்டதிபதி சாதகமாக இருந்தால் நற்பலன் ஏற்படும் கேதுசெவ்வாய் வீட்டில் இருந்து செவ்வாய் வக்ரம் பெற்று அமைந்து தற்போதுகேது திசை நடைபெறுவதால் அனுகூலமானப் பலன்களைப் பெறமுடியவில்லை என்றாலும் அடுத்து 12ல் உள்ள சுக்கிர திசைவரவிருப்பதால் வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புஅமையும். தினமும் விநாயரை வழிபடுவது நல்லது.
எனக்கு எப்போது தகுதியான வேலை அமையும்.
சரவணன், சென்னை.
ஒருவரது உத்தியோக நிலையை பற்றி அறிய ஜீவன ஸ்தானமான 10ம்இடம் பலமாக இருக்க வேண்டும். சதய நட்சத்திரம், கும்ப ராசி, கடகலக்னத்தில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் 10ம் அதிபதி செவ்வாய்திரிகோண ஸ்தானமான 5ல் ஆட்சி பெற்று அமைந்துள்ளார். இது நல்லஅமைப்பாகும். தற்போது அட்டம ஸ்தானத்தில் அமைந்துள்ள சந்திரனின்புக்தி நடைபெறுவதால் தேவையற்ற மனக்குழப்பங்கள், பணிபுரியும்இடத்தில் உயரதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மார்ச்2018க்கு பிறகு பணியில் நல்ல முன்னேற்றம் வரும். விரும்பியவாய்ப்புகள் கிட்டும். வெங்கடாசலபதியை வழிபாடு செய்வது திருப்பதிசென்று வருவது உத்தமம்.
என்னுடைய மகளுக்கு 2017ல் மருத்துவ படிப்பிற்கான நுழைவு சீட்டுகிடைக்குமா.
ஸ்ரீனிவாசன், சென்னை.
பொதுவாக லக்ன, ராசிக்கு கல்வி ஸ்தானமான 4ல் சூரியன் செவ்வாய்பலமாக இருந்தால் மருத்துவ கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்உண்டாகும்.
சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள ஜாதகிக்கு 4ம்அதிபதி புதன் சுக்கிர சேர்க்கை பெற்று இருப்பதால் கணக்கு, கம்பியூட்டர்,பி. இ. ஆர்க் போன்ற கல்வி சாதகமாக இருக்கும் என்றாலும் ராசிக்கு 4ல்செவ்வாய் உச்சம் பெற்று அமைந்து, செவ்வாய் வீட்டில் சூரியன்இருப்பதால் மருத்துவ சம்மந்தப்பட்ட கல்வியில் முயற்சி செய்தால்நற்பலனை அடையலாம். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியைவழிபாடு செய்வது உத்தமம்.
கடந்த 3 வருடங்களாக நல்ல வேளை கிடைப்பதற்காகமுயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு எப்பொழுது நல்ல பணிஅமையும்.
அரவிந்த், தஞ்சாவூர்.
ஒருவருக்கு நிரந்தரமாக நல்ல பணி அமைய 10ம் அதிபதி பலமாக இருக்கவேண்டும்.
கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ளதங்களுக்கு 10ம் அதிபதி குரு வக்ரம் பெற்று அமைந்திருப்பது சற்றுஅனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் நிரந்தரமாக வேலைகிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகின்றன. கோட்சாரரீதியாகஏழரை சனி நடைபெறுவதும் வாழ்வில் முன்னேற்ற தடைகளைஏற்படுத்தும். இதுமட்டுமின்றி 6ல் உள்ள சுக்கிர திசையில் கடந்தகாலங்களில் நீசம் பெற்ற சந்திர புக்தி நடைபெற்றதும் சாதகமற்றஅமைப்பாகும். தற்போது செவ்வாய் புக்தி தொடங்கி உள்ளது. இக்காலங்களில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். தொடர்ந்துசனிக்குரிய பரிகாரங்களை செய்து வருவது உத்தமம்.
எனக்கு எப்போது அரசு துறையில் வேலை அமையும்.
ஜெய சுதா, சேலம்.
பொதுவாக ஒருவருக்கு அரசு துறைகளில் வேலை அமைய சூரியன்செவ்வாய் போன்ற கிரகங்கள் பலம் பெற வேண்டும்.
திருவோண நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ளஉங்களுக்கு சூரியன் ராகு சாரம் பெற்று, செவ்வாய் நீசம் பெற்றிருப்பதால்நேரடியாக அரசு பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. 10ல் குருதனித்து இருப்பதாலும், 10ம் அதிபதி சனி ராகு சாரம் பெற்றிருப்பதாலும்தனியார் துறை மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில்உத்தியோகம் கிட்டும். அதற்கான முயற்சிகளை செய்வது நல்லது.வெங்கடாசலபதியை வழிபாடு செய்வது உத்தமம்.
எனக்கு திருமணம் நடக்க பரிகாரம் கூறுங்கள்.
தாயுமான சாமி, உத்தம பாளையம்.
ஒருவருக்கு எளிதில் திருமணம் நடைபெற 2,7ம் பாவங்கள் பலமாகஇருத்தல் அவசியம்.
ரேவதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள்ஜாதகத்தில் 2,7க்கு அதிபதி செவ்வாய் வக்ரம் பெற்று அமைந்திருப்பதும், 2ல் கேது, 8ல் ராகு அமைந்திருப்பதும், களத்திர காரகன் சுக்கிரன் சூரியன்,ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதும் கடுமையான களத்திர தோஷம் ஆகும்.இது மட்டுமின்றி ஆண்களுக்கு வீரிய ஸ்தானமான 3ம் வீட்டின் அதிபதிகுரு வக்ரம் பெற்றிருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உங்களுக்குஇல்வாழ்வில் ஈடுபாடு குறைவாகவே இருக்கும். திருமணம்நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படியே நடைபெற்றாலும்வாழ்வில் நிம்மதி குறைவுகளே இருக்கும். மிகவும் விட்டு கொடுத்துசெல்ல நேரிடும். புத்திர, பூர்வ பண்ணிய ஸ்தானாதிபதியான சனியும்வக்ரம் பெற்றிருப்பதால் முடிந்தவரை குல தெய்வ வழிபாடுகளைதொடர்ந்து செய்து வருவது நல்லது.
நான் காவல் துறையில் பணிபுரிய ஆசை படுகிறேன். முயற்சிசெய்தால் கிடைக்குமா.
நவீன் ராஜ், சென்னை.
ஒருவர் ஜாதகத்தில் 10ல் செவ்வாய் அமைந்து, சூரியன், குரு போன்றகிரகங்கள் பலமாக இருந்தால் போலீஸ் துறைகளில் பணிபுரியும் வாய்ப்புஅமையும்.
அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள்ஜாதகத்தில் குருவும், சூரியனும் உச்சம் பெற்று, 10ம் அதிபதி செவ்வாய்குரு சாரம் பெற்று திரிகோண ஸ்தானமான 5ல் அமைந்து இருப்பதால்நீங்கள் முயற்சி செய்தால் கண்டிப்பாக போலீஸ் மற்றும் அரசு துறையில்பணி கிட்டும். தற்போது நீசம் பெற்ற புதனின் திசை நடைபெறுவதால்விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.
நான் எப்போது நல்ல மனிதன் ஆவேன்
ReplyDelete